மருத்துவமனைகளில் அனாதைகளாக விடப்பட்ட பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவையில் அனாதைகளாக விடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி வேலம்மாள் (40) என்ற பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கணவன் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டதோடு பெற்ற குழந்தையை அரசு மருத்துவமனையிலேயே விட்டுச்சென்றார்.

இந்த குழந்தையை அரசு மருத்துவமனை நிர்வாகம் பத்திரமாக மீட்டது. அதோடு, குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதேப்போல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 5-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே தாய் அக்குழந்தையை பரிதவிக்கவிட்டுச் சென்று விட, குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது தனியார் மருத்துவமனை நிர்வாகம். 

பெற்றோரின் ஆதரவின்றி விடப்பட்ட இரண்டு பிஞ்சு குழந்தைகளும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த இரு குழந்தைகளும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் கூறுகையில், 'இந்த வருடம் ஆதரவின்றி விடப்பட்ட 9 குழந்தைகளை கோவை அரசு மருத்துவமனை மீட்டுள்ளது. அதில் 6 குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகள் அவர்களின் தாய் தந்தையிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுவிட்டனர். 

ஆண்டு தோறும் இது போல் பச்சிளம் குழந்தைகளை அனாதைகளாக விட்டுச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன . கடந்த ஆண்டு 11 பச்சிளம் குழந்தைகள் ஆதரவின்றி விடப்பட்டன. இதில் பெரும்பாலானவை பெண் குழந்தைகள்.

ஆதரவற்ற, திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத ஆண்கள் இவ்வாறு பிஞ்சு குழந்தைகளை அனாதைகளாக விட்டுச் சென்றுவிடுகின்றனர். இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று' என்று அவர் கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...