திருநங்கைகளை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கோவையில் பாலியல் தொழிலை செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடைபெற்ற மனு நீதி நாள் முகாமின் போது திருநங்கைகள் மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் தங்களை சில திருநங்கைகள் பாலியல் தொழிலை தொடரச் சொல்லி வற்புறுத்துவதாகவும், அவர்களிடம் உள்ள தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரியும் மனு அளித்திருந்தனர்.

இது தொடர்பாக கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் போலீசார் சமாதானப்படுத்த மட்டுமே முயற்சித்ததாகவும் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மூவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூவரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...