கோவையில் பாலியல் தொழிலை செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடைபெற்ற மனு நீதி நாள் முகாமின் போது திருநங்கைகள் மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் தங்களை சில திருநங்கைகள் பாலியல் தொழிலை தொடரச் சொல்லி வற்புறுத்துவதாகவும், அவர்களிடம் உள்ள தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரியும் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் போலீசார் சமாதானப்படுத்த மட்டுமே முயற்சித்ததாகவும் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மூவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூவரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடைபெற்ற மனு நீதி நாள் முகாமின் போது திருநங்கைகள் மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் தங்களை சில திருநங்கைகள் பாலியல் தொழிலை தொடரச் சொல்லி வற்புறுத்துவதாகவும், அவர்களிடம் உள்ள தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரியும் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் போலீசார் சமாதானப்படுத்த மட்டுமே முயற்சித்ததாகவும் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மூவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூவரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.