கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் என்னும் தன்னார்வ அமைப்பு உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த அமைப்பு உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவர்கள் மில்லினியம் டோனார் என்ற பெயரில் கைபேசி செயலியை தொடங்கியுள்ளனர். உடல் உறுப்புதானம் செய்ய விரும்புவோர் இதில் பதியலாம். மேலும் உடல் உறுப்புதானம் குறித்த தகவல்களையும் இந்த செயலியின் மூலம் அரிந்துகொள்ளலாம்.
அனில் ஸ்ரீவத்சா, சிவானி சோனி, பிரசாந்த் பகத் மற்றும் யஷ்வரதன் சோனி ஆகியோர் இந்த பயணத்தை பெங்களூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்த பயணத்தில் இவர்கள் செய்யும் உடல் உறுப்புதானம் பற்றிய பிரச்சாரங்கள் படமாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.

இதுகுறித்து பேசிய அனில் ஸ்ரீவத்சா, 'கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் சார்பாக ட்ரைவ் இந்திய என்ற பெயரில் சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளோம். கன்னியாகுமரி முதல் இமாச்சல பிரதேசம் வரை உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் மில்லினியம் டோனார் செயலி மூலம் உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். எங்கள் குழு இன்று கோவையிலிருந்து புறப்பட்டு நாளை கொச்சினுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது' என்றார்.


இந்த அமைப்பு உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவர்கள் மில்லினியம் டோனார் என்ற பெயரில் கைபேசி செயலியை தொடங்கியுள்ளனர். உடல் உறுப்புதானம் செய்ய விரும்புவோர் இதில் பதியலாம். மேலும் உடல் உறுப்புதானம் குறித்த தகவல்களையும் இந்த செயலியின் மூலம் அரிந்துகொள்ளலாம்.
அனில் ஸ்ரீவத்சா, சிவானி சோனி, பிரசாந்த் பகத் மற்றும் யஷ்வரதன் சோனி ஆகியோர் இந்த பயணத்தை பெங்களூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்த பயணத்தில் இவர்கள் செய்யும் உடல் உறுப்புதானம் பற்றிய பிரச்சாரங்கள் படமாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.

இதுகுறித்து பேசிய அனில் ஸ்ரீவத்சா, 'கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் சார்பாக ட்ரைவ் இந்திய என்ற பெயரில் சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளோம். கன்னியாகுமரி முதல் இமாச்சல பிரதேசம் வரை உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் மில்லினியம் டோனார் செயலி மூலம் உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். எங்கள் குழு இன்று கோவையிலிருந்து புறப்பட்டு நாளை கொச்சினுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது' என்றார்.
