கோவை மாவட்ட அளவில் முதியோர்களுக்கான தடகளப்போட்டி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் முதியோர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன . அதன்படி, நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன .
35 வயதிலிருந்து 80 வயதுக்கு மேலானவர்கள் பங்கேற்றுள்ள இந்த தடகளப் போட்டியில் வயதின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றது.

250 ஆண்களும், 60 பெண்களும் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தையம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தடை தாண்டுதல் உட்பட இருபத்தைந்து வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், 55 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் மூத்தோர் தடகள சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் முதியோர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன . அதன்படி, நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன .
35 வயதிலிருந்து 80 வயதுக்கு மேலானவர்கள் பங்கேற்றுள்ள இந்த தடகளப் போட்டியில் வயதின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றது.

250 ஆண்களும், 60 பெண்களும் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தையம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தடை தாண்டுதல் உட்பட இருபத்தைந்து வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், 55 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் மூத்தோர் தடகள சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.