குப்பைகளால் நிறைந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வரும் அன்னூர் பெரிய குளத்தினை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னூர் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 119 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னூர் பெரிய குளம் உள்ளது. அன்னூரில் கனமழை பெய்தால் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் மழை நீர் இந்த குளத்தை வந்தடையும். இந்த குளத்தில் நீர் நிரம்பினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 150-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டமும் உயரும்.
இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்த குளம் தற்போது போதிய பராமரிப்பின்றி குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. முட்புதர்கள், செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் குளத்திற்கான நீர் வழித்தடம் முற்றிலும் அடைபட்டுள்ளது.

மேலும், பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் உணவு விடுதிகளில் இருந்து வரும் கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் கழிப்பிடக் கழிவு நீர் என பல்வேறு கழிவுகள் இந்த குளத்தில் தான் கலக்கவிடப்படுகின்றன என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சி.சண்முகம்.

பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அன்னூர் குளத்தை தேர்வு செய்து பட்டிகள் அமைத்து குளத்தை மேலும் அசுத்தம் செய்துவருகின்றனர். குளத்தில் பன்றிகள் வளர்ப்பு, கழிவுகள் தேங்குவதை பொதுமக்கள் தடுக்க தவறியதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்றார் அன்னூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்புவாசி.
இதுகுறித்து அன்னூர் பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்னூர் பெரிய குளத்தில் கழிவுகள் எதுவும் கொட்டப்படுவதில்லை. குளத்தில் நிறைந்துள்ள கழிவுகள் விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தார்.

அன்னூர் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 119 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னூர் பெரிய குளம் உள்ளது. அன்னூரில் கனமழை பெய்தால் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் மழை நீர் இந்த குளத்தை வந்தடையும். இந்த குளத்தில் நீர் நிரம்பினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 150-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டமும் உயரும்.
இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்த குளம் தற்போது போதிய பராமரிப்பின்றி குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. முட்புதர்கள், செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் குளத்திற்கான நீர் வழித்தடம் முற்றிலும் அடைபட்டுள்ளது.

மேலும், பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் உணவு விடுதிகளில் இருந்து வரும் கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் கழிப்பிடக் கழிவு நீர் என பல்வேறு கழிவுகள் இந்த குளத்தில் தான் கலக்கவிடப்படுகின்றன என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சி.சண்முகம்.

பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அன்னூர் குளத்தை தேர்வு செய்து பட்டிகள் அமைத்து குளத்தை மேலும் அசுத்தம் செய்துவருகின்றனர். குளத்தில் பன்றிகள் வளர்ப்பு, கழிவுகள் தேங்குவதை பொதுமக்கள் தடுக்க தவறியதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்றார் அன்னூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்புவாசி.
இதுகுறித்து அன்னூர் பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்னூர் பெரிய குளத்தில் கழிவுகள் எதுவும் கொட்டப்படுவதில்லை. குளத்தில் நிறைந்துள்ள கழிவுகள் விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தார்.
