சுகாதார சீட்கேட்டின் அடையாளமான அன்னூர் பெரிய குளம்

குப்பைகளால் நிறைந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வரும் அன்னூர் பெரிய குளத்தினை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னூர் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 119 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னூர் பெரிய குளம் உள்ளது. அன்னூரில் கனமழை பெய்தால் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் மழை நீர் இந்த குளத்தை வந்தடையும். இந்த குளத்தில் நீர் நிரம்பினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 150-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டமும் உயரும்.

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்த குளம் தற்போது போதிய பராமரிப்பின்றி குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. முட்புதர்கள், செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் குளத்திற்கான நீர் வழித்தடம் முற்றிலும் அடைபட்டுள்ளது.



மேலும், பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் உணவு விடுதிகளில் இருந்து வரும் கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் கழிப்பிடக் கழிவு நீர் என பல்வேறு கழிவுகள் இந்த குளத்தில் தான் கலக்கவிடப்படுகின்றன என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சி.சண்முகம்.



பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அன்னூர் குளத்தை தேர்வு செய்து பட்டிகள் அமைத்து குளத்தை மேலும் அசுத்தம் செய்துவருகின்றனர். குளத்தில் பன்றிகள் வளர்ப்பு, கழிவுகள் தேங்குவதை பொதுமக்கள் தடுக்க தவறியதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்றார் அன்னூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்புவாசி.

இதுகுறித்து அன்னூர் பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்னூர் பெரிய குளத்தில் கழிவுகள் எதுவும் கொட்டப்படுவதில்லை. குளத்தில் நிறைந்துள்ள கழிவுகள் விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தார்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...