பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது.

கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோவை மாநகர தெற்குமாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமைவகித்தார்.
இதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசன்முகமது ஜின்னா ஆகியோர் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், அவைத் தலைவர் வெ.ந.பழனியப்பன் மற்றும் கழக முன்னணி மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது.

கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோவை மாநகர தெற்குமாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமைவகித்தார்.
இதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசன்முகமது ஜின்னா ஆகியோர் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், அவைத் தலைவர் வெ.ந.பழனியப்பன் மற்றும் கழக முன்னணி மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.