கோவையில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பொதுப் பணித்துறை சின்னவேடப்பட்டி தடுப்பணையை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், சங்கனூர் பள்ளத்தில் இருந்து தடாகம் வழியாக சின்னவேடப்பட்டி ஏரிக்கு நீர் வழிப்பாதை அமைந்துள்ளது. அவ்வாறு வரும் நீரினை ஏரியில் தேக்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெரும் வகையில் கடந்த 1950 ஆம் ஆண்டு சின்னவேடப்பட்டியில் தடுப்பணை கட்டப்பட்டது. 5 சட்டர்கள் கொண்ட இந்த தடுப்பணையில் மூன்று சட்டர்கள் நீரினை வெளியேற்றவும், இரண்டு சட்டர்கள் மணலை தடுத்து நிறுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி இந்த தடுப்பணை முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சின்னவேடப்பட்டி ஏரியில் நீர் வழித்தடம் அடைபட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவணம்பட்டி, அரசூர், கணபதி, நீலம்பூர், சின்னியம்பாளையம், கோவில்பாளையம் மற்றும் குரும்பப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சின்னவேடப்பட்டி நீர் வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்றும், தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து தற்போது, சின்னவேடப்பட்டி ஏரி தடுப்பணையினை சீரமைக்கும் பொருட்டு பொதுப்பணித் துறை ரூ.30 லட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சங்கனூர் பள்ளத்தில் இருந்து தடாகம் வழியாக சின்னவேடப்பட்டி ஏரிக்கு நீர் வழிப்பாதை அமைந்துள்ளது. அவ்வாறு வரும் நீரினை ஏரியில் தேக்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெரும் வகையில் கடந்த 1950 ஆம் ஆண்டு சின்னவேடப்பட்டியில் தடுப்பணை கட்டப்பட்டது. 5 சட்டர்கள் கொண்ட இந்த தடுப்பணையில் மூன்று சட்டர்கள் நீரினை வெளியேற்றவும், இரண்டு சட்டர்கள் மணலை தடுத்து நிறுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி இந்த தடுப்பணை முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சின்னவேடப்பட்டி ஏரியில் நீர் வழித்தடம் அடைபட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவணம்பட்டி, அரசூர், கணபதி, நீலம்பூர், சின்னியம்பாளையம், கோவில்பாளையம் மற்றும் குரும்பப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சின்னவேடப்பட்டி நீர் வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்றும், தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து தற்போது, சின்னவேடப்பட்டி ஏரி தடுப்பணையினை சீரமைக்கும் பொருட்டு பொதுப்பணித் துறை ரூ.30 லட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.