கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் நியாயமான போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனையை 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி இன்று காலை முதல் நகரை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
2016-17 ஆம் ஆண்டுக்கான முறையான போனஸ், சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர், கிளீனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தீபாவளிப் பண்டிகை முடிந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், மாநகராட்சி அலுவலர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஒப்பந்த தொழிலாளர் சார்பாக முறையான தினக்கூலி, வார விடுமுறை, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்குதல் மற்றும் நியாயமான போனஸ் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழிப்படி, குழுக்கள் அமைத்து மூன்று வாரங்களுக்குள் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
2016-17 ஆம் ஆண்டுக்கான முறையான போனஸ், சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர், கிளீனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தீபாவளிப் பண்டிகை முடிந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், மாநகராட்சி அலுவலர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஒப்பந்த தொழிலாளர் சார்பாக முறையான தினக்கூலி, வார விடுமுறை, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்குதல் மற்றும் நியாயமான போனஸ் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழிப்படி, குழுக்கள் அமைத்து மூன்று வாரங்களுக்குள் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.