டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் இணைந்து பணியாற்ற மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (அக்டோபர் 21) பள்ளப்பாளையம் பேரூராட்சி 9-வது வார்டு துளசிதாசன் வீதியில் மாவட்ட ஆட்சியர் நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் துப்புறவு சுகாதாரப்பணிகள் தொடர்பாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
கோவையில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. தினந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்தும், அரசு அலுவலர்களிடம் இருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதன்படி மேற்கொள்ள வேண்டிய பணிகள் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றது.
வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து குழுக்கள் பல அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உயர் அலுவலர்களாலும் தினமும் அதிகாலை நேரங்களில் மாவட்டத்தின் பலபகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வுகளின்போது, குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காரணிகளாக அறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்படாத ஆட்டுக்கல், பாட்டில்கள், சிமெண்ட் தொட்டிகள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்படுகின்றது.
உள்ளாட்சித் துறைகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்தல் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், காய்ச்சல்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழுகள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன .
மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் ஆகியோர் முன்வந்து தங்களது சுற்றுப்புறத்திலும், பள்ளி கல்லூரிகளிலும், பணிபுரியும் இடங்களிலும் சுகாதாரம் காத்து ஏடிஸ் கொசுப்புழு காரணிகளை அழித்து, பொதுமக்களிடத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சி) கணேஷ்ராம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (அக்டோபர் 21) பள்ளப்பாளையம் பேரூராட்சி 9-வது வார்டு துளசிதாசன் வீதியில் மாவட்ட ஆட்சியர் நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் துப்புறவு சுகாதாரப்பணிகள் தொடர்பாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
கோவையில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. தினந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்தும், அரசு அலுவலர்களிடம் இருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதன்படி மேற்கொள்ள வேண்டிய பணிகள் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றது.
வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து குழுக்கள் பல அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உயர் அலுவலர்களாலும் தினமும் அதிகாலை நேரங்களில் மாவட்டத்தின் பலபகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வுகளின்போது, குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காரணிகளாக அறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்படாத ஆட்டுக்கல், பாட்டில்கள், சிமெண்ட் தொட்டிகள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்படுகின்றது.
உள்ளாட்சித் துறைகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்தல் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், காய்ச்சல்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழுகள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன .
மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் ஆகியோர் முன்வந்து தங்களது சுற்றுப்புறத்திலும், பள்ளி கல்லூரிகளிலும், பணிபுரியும் இடங்களிலும் சுகாதாரம் காத்து ஏடிஸ் கொசுப்புழு காரணிகளை அழித்து, பொதுமக்களிடத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சி) கணேஷ்ராம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி பங்கேற்றனர்.