110-வது பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 23ம் தேதியன்று கோவை காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி மைதானத்தில் காலை 6 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில், பொதுப்பிரிவில் 8 காலிப் பணியிடங்களும், துப்புரவுப் பணிகளில் 3 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசு வேலை மற்றும் சுய தொழில்பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்சிசி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு முன்னிரிமை அளிக்கப்படும்.
மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று, தங்களின் கல்வி மற்றும் இதரத் தகுதி சான்றிதழ்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வி மற்றும் உடற்தகுதி:-
1. பொதுப்பிரிவு காலிப்பணியிடத்திற்கு 10ம் வகுப்புத் தேர்வில் 45 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. துப்புரவுப் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.)
3. 18 வயது முதல் 42 வயதிற்கு உட்பட்டு 160 செ.மீ மற்றும் அதற்கு மேல் உயரம் உடையவராக இருக்க வேண்டும்.
4. மார்பளவு 77 செ.மீட்டரும், விரிந்த நிலையில் 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 50 கிலோ எடை உடையவராக இருத்தல் அவசியம்.
5. குறிப்பாக, அனைத்து விதத்திலும் பொருத்தமாக மருத்துவத் தகுதி இருத்தல் வேண்டும்.
தமிழகத்தில் அரசு வேலை மற்றும் சுய தொழில்பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்சிசி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு முன்னிரிமை அளிக்கப்படும்.
மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று, தங்களின் கல்வி மற்றும் இதரத் தகுதி சான்றிதழ்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வி மற்றும் உடற்தகுதி:-
1. பொதுப்பிரிவு காலிப்பணியிடத்திற்கு 10ம் வகுப்புத் தேர்வில் 45 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. துப்புரவுப் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.)
3. 18 வயது முதல் 42 வயதிற்கு உட்பட்டு 160 செ.மீ மற்றும் அதற்கு மேல் உயரம் உடையவராக இருக்க வேண்டும்.
4. மார்பளவு 77 செ.மீட்டரும், விரிந்த நிலையில் 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 50 கிலோ எடை உடையவராக இருத்தல் அவசியம்.
5. குறிப்பாக, அனைத்து விதத்திலும் பொருத்தமாக மருத்துவத் தகுதி இருத்தல் வேண்டும்.