தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.
அதன்படி, 2017 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள், அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிபரம் மற்றும் முழு முகவரியுடன் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.
அதன்படி, 2017 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள், அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிபரம் மற்றும் முழு முகவரியுடன் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.