டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- விசிக தொல்.திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



"டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மத்திய ஆய்வுக்குழு பெயரளவிற்கு மட்டுமே சுற்றுப் பயணம் செய்து கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்தனர், டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேரள அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது. இதற்கு முன்னோடியாக தமிழகத்தில் ஏற்கனவே 206 பேருக்கு கடந்த திமுக அரசு சார்பில் ஆகம விதிகளின்படி அர்ச்சகராக நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பணி நியமனத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மெர்சல் படத்திற்கு எதிராக பாஜக போராடுவதை விடுத்து, அப்படத்திற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே சரியாக இருக்கும்.

கலைஞர் தன்னம்பிக்கை நிறைந்த தலைவர். கோபாலபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை காரில் பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல் நிலை முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...