ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு எனது ஆதரவு என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், தனியார் அமைப்பு சார்பாக "மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017" என்ற நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தனக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மேலும், பட வாய்ப்புகளும் கிடைப்பதாகவும் கூறினார். தற்போது, காஞ்சனா படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்காக நிச்சயம் எதாவது விரைவில் செய்வேன் எனக் கூறிய ஓவியா, அரசியலை சிலர் பணம் மற்றும் புகழுக்காக பயன்படுத்துவதாகவும், புகழ் மற்றும் பணம் கொண்ட கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு தனது ஆதரவு நிச்சயம் உண்டு என தெரிவித்தார். மேலும், ரஜினி பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாததால், கமலுக்கே தனது ஆதரவு எனவும் அவர் கூறினார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், தனியார் அமைப்பு சார்பாக "மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017" என்ற நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தனக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மேலும், பட வாய்ப்புகளும் கிடைப்பதாகவும் கூறினார். தற்போது, காஞ்சனா படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்காக நிச்சயம் எதாவது விரைவில் செய்வேன் எனக் கூறிய ஓவியா, அரசியலை சிலர் பணம் மற்றும் புகழுக்காக பயன்படுத்துவதாகவும், புகழ் மற்றும் பணம் கொண்ட கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு தனது ஆதரவு நிச்சயம் உண்டு என தெரிவித்தார். மேலும், ரஜினி பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாததால், கமலுக்கே தனது ஆதரவு எனவும் அவர் கூறினார்.