வேலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதை விரும்பாத காவல்துறை உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஸ்ரீகாந்த் (47). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் காரணமாக வேலூர் சிறப்பு காவல்படைக்கு பணிக்கு சென்றார். அங்கு, கோவையில் இருந்து வேலூருக்கு ஸ்ரீகாந்தை இடமாற்றம் செய்யவதாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர், பணியிடமாற்றம் குறித்து மனைவியிடம் அலோசித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், விரக்தியடைந்த ஸ்ரீகாந்த் இன்று (அக்.,19) வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஸ்ரீகாந்த் (47). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் காரணமாக வேலூர் சிறப்பு காவல்படைக்கு பணிக்கு சென்றார். அங்கு, கோவையில் இருந்து வேலூருக்கு ஸ்ரீகாந்தை இடமாற்றம் செய்யவதாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர், பணியிடமாற்றம் குறித்து மனைவியிடம் அலோசித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், விரக்தியடைந்த ஸ்ரீகாந்த் இன்று (அக்.,19) வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.