எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தம் - எஸ்.ஏ.சி.ஓ.என் இயக்குநர் மறுப்பு

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கு (எஸ்.ஏ.சி.ஓ.என்)  வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி, நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல, வெறும் வதந்தி என அதன் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த பிரபல பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி புகழைப் போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த பறவையியல் ஆராய்ச்சி மையத்திற்கு, ஆண்டுதோறும்  நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இந்த தகவலை, எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்தின் இயக்குநர் சங்கர் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எங்களது ஆராய்ச்சி மையமானது பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. அவற்றிற்கு மத்திய அரசுதான் நிதி வழங்குகிறது. ஒருசில திட்டங்கள், மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் உள்ள முதன்மையான பறவையியல் ஆராய்ச்சி மையங்களில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையமும் ஒன்று. மொத்தம் 54.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையமானது ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு  அவர் கூறினார். 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...