2016-17 ஆண்டுக்கான முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்தப்பணியாளர், ஓட்டுநர், கிளீனர் கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழநாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு & பொதுப்பணியாளர் சங்கம் மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா போன்ற அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஜனசக்தி மஸ்தூர் சபாவின் தலைவர் பழனிவேல் கூறியதாவது, "முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.,19) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது திடீரென்று நடத்தப்படும் போராட்டம் அல்ல. சம்பள பிரச்சனை குறித்து பல முறை மனு கொடுத்தும் முறையான பதில் தரப்படவில்லை. இந்தநிலையில், மாநகராட்சி சார்பாக வெறும் ரூ.500, ரூ.1000 போனஸாக கொடுக்கப்பட்டது. இது சட்டப்படியான போனஸ் இல்லை. முறையான தொகை வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

தீபாவளிப் பண்டிகை நேற்று முடிந்த நிலையில், தெருக்களில் குப்பைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் அகற்றுப்படுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.