வாலிபரை கொலை செய்த கும்பலை 8 மணி நேரத்தில் கைது செய்த துடியலூர் போலீஸார்


கோவையில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை துடியலூர் போலீஸார் 8 மணி நேரத்தில் கைது செய்தனர். 

ரத்தினபுரி, தில்லைநகரைச் சேர்ந்த சீனிவாசன் (20) என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவர், நேற்றிரவு 10 மணியளவில் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில், கொலை நடந்த 8 மணி நேரத்தில், குற்றவாளிகளான ஜீனத்குமார் (30), சூர்யபிரகாஷ் (27), செந்தில்குமார் (30) ஆகிய 3 பேரை ரத்தினப்புரி பகுதியில் உள்ள நாராயணசாமி லே அவுட்டில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கைது நடவடிக்கை குறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சீனிவாசன் மற்றும் கொலையாளிகள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான விக்கி என்பவர் ஜீனத்குமாருடன் சண்டையிட்டு மாயமாகியுள்ளார். இதனால், விக்கி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறு சீனிவாசனிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

 பின்னர், ஜீனத்குமார், சூர்யபிரகாஷ் , செந்தில்குமார் ஆகியோருடன் சீனிவாசன், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள விக்கியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு விக்கி, வீட்டில் இருக்கிறாரா..? எனப் பார்த்து வருமாறு சீனிவாசனிடம் மூவரும் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், கத்தி மற்றும் கற்களை கொண்டு தாக்கி சீனிவாசனை கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...