திருச்சியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கம்


திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல், சேலம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

திருச்சியில் இருந்து நாளை (அக்.,17) காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் எண் - 06049, பிற்பகல் 2.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம் சென்றடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 17 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலானது, குளித்தலை, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் பங்கராபேட்டை போன்ற நிறுத்தங்களில் நிறுத்தப்படும். திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 5.30 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. 

இதேபோல, ரயில் எண் - 82638 கோவை - சென்னை இடையிலான சுவிதா சிறப்பு ரயில் (ஒருவழி) கோவையில் இருந்து வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 03.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 18 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 3 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 23 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...