கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அக்கட்சி அளித்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள வாலாங்குளம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கரை பகுதிகளில் இருமருங்கிலும், இரவு நேரங்களில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், ஆவின் கடைகள் அமைத்தல்/உணவகங்கள் அமைத்தல் போன்றவை இருப்பதால், குளத்தின் பரப்பளவு குறைந்து வருவதுடன், முறையான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதுபோன்ற நோய்கள் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து களஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும், குளத்தின் கரை பகுதிகளில் உள்ள ஆக்கரிமிப்புகளை அகற்றுவதோடு, மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க நீர் நிலைகளை சீர் செய்ய வேண்டிகிறோம். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.