போலி ஆவணங்களை தயார் செய்து பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு சுமார் 62 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்ய தங்களது முன்னோர்களுக்கு, பஞ்சமி நிலங்களை ஆங்கிலேயர்கள் வழங்கினர். அந்த இடத்தில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம்.
இந்த நிலையில், காரமடையைச் சேர்ந்த பவுன்புரோக்கர் மகேந்திரகுமார் சேட்டு என்பவர் தங்களுடைய நிலத்தை விற்பனை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து வைத்துள்ளார். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமிநிலம் தன்னுடையது எனக் கூறி கிராம மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
எங்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்த மகேந்திரகுமார் சேட்டு என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு சுமார் 62 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்ய தங்களது முன்னோர்களுக்கு, பஞ்சமி நிலங்களை ஆங்கிலேயர்கள் வழங்கினர். அந்த இடத்தில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம்.
இந்த நிலையில், காரமடையைச் சேர்ந்த பவுன்புரோக்கர் மகேந்திரகுமார் சேட்டு என்பவர் தங்களுடைய நிலத்தை விற்பனை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து வைத்துள்ளார். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமிநிலம் தன்னுடையது எனக் கூறி கிராம மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
எங்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்த மகேந்திரகுமார் சேட்டு என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.