இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க ஆண்டுதோறும் பட்டாசுகளை வெடிக்க கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 13-ம் தேதி கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், இந்துக்களை மிரட்டுகின்ற தொ னியில் எச்சரிக்கைவிட்டதை பாரத் சேனா கண்டிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான புத்தாண்டு அன்றும் நள்ளிரவில் பட்டாசு வெடித்தும் வாண வேடிக்கைகளை வெடித்து கொண்டாடிகின்றனர். அப்போதெல்லாம், எந்த அறிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுவதில்லை. பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித தடைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிக்காமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க ஆண்டுதோறும் பட்டாசுகளை வெடிக்க கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 13-ம் தேதி கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், இந்துக்களை மிரட்டுகின்ற தொ னியில் எச்சரிக்கைவிட்டதை பாரத் சேனா கண்டிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான புத்தாண்டு அன்றும் நள்ளிரவில் பட்டாசு வெடித்தும் வாண வேடிக்கைகளை வெடித்து கொண்டாடிகின்றனர். அப்போதெல்லாம், எந்த அறிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுவதில்லை. பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித தடைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிக்காமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.