பழைய கடன்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு


பழைய கடன்களை ரத்து செய்துவிட்டு புதிய கடன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருந்தாலும் முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 



மேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழமேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.

எனவே, வறட்சி நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கடன் பெற்று வறட்சியால் செலுத்த முடியாத விவசாயிகளின் கடனை ரத்து செய்துவிட்டு, இந்த ஆண்டு சாகுபடிக்கான புதிய கடன்கள் வழங்க வேண்டும்.

பயிற்காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இருப்பதை மாற்றி தேசிய காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...