பழைய கடன்களை ரத்து செய்துவிட்டு புதிய கடன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருந்தாலும் முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழமேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.
எனவே, வறட்சி நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கடன் பெற்று வறட்சியால் செலுத்த முடியாத விவசாயிகளின் கடனை ரத்து செய்துவிட்டு, இந்த ஆண்டு சாகுபடிக்கான புதிய கடன்கள் வழங்க வேண்டும்.
பயிற்காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இருப்பதை மாற்றி தேசிய காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.