முறையாக ஊதியம் வழங்கக் கோரி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


கோவை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக ஊதியம் வழங்கக் கோரி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்மாவதி மருத்துவ மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மாதம் தோறும் 8,200 ரூபாய் சம்பளம் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 8,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் 1,000 ரூபாய் தொழிலாளர் வைப்பு நிதியாக பிடிக்கப்படுவது வழக்கம். விடுப்பு இல்லாமல் அனைத்து நாட்களும் எட்டு மணிநேரத்திற்கு ஒரு குழுவாக, மூன்று பிரிவுகளில் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுப்பு எடுத்தால் ஐந்தாயிரம், நான்காயிரம் என முறையான கணக்கு இல்லாமல் ஊதியம் பிடித்து வழங்குவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகைக்கான வைப்பு நிதியின் கணக்கு எண்ணைக் கேட்டால் நிறுவனத்தினர் தவறான எண்ணை வழங்குகின்றனர். அந்த எண்ணில் வைப்புத்தொகை பூஜ்யம் என காட்டுகிறது. 

பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், இன்று தங்களுக்கு பண்டிகைக்கால போனஸ் மற்றும் வார விடுமுறை, சம்பளத்தொகை அனைத்தையும் அச்சடித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வேலையை புறக்கணித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டதில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களுடன் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி மகேஷ்வரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு மற்றும் வைப்பு நிதி பிடித்தம் சம்பந்தமாக அனைத்து தகவல்களும் விரைவில் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி மருத்துவ மேலாண்மை நிறுவனம் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ்-வின் உறவினர் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...