கோவை தனியார் கட்டட நிருவன சிவில் இன்ஜினியர்ஸ் பிரதீப், விஜயன், மாரியப்பன், சுதாகர், அன்பழகன் ஆகியோர் கொடைக்கானலிற்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (அக்டோபர் 15) கோவைக்கு திரும்பி காரின் மூலம் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சாலை வளைவில் முன் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை இல்லாத காரணத்தினால் இவர்கள் வேகமாக ஓட்டி வந்த கார் திரும்ப இயலாமல் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிரதீப், விஜயன், மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுதாகர் மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அன்பழகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.