பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி



கோவை தனியார் கட்டட நிருவன சிவில் இன்ஜினியர்ஸ் பிரதீப், விஜயன், மாரியப்பன், சுதாகர், அன்பழகன் ஆகியோர் கொடைக்கானலிற்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (அக்டோபர் 15) கோவைக்கு திரும்பி காரின் மூலம் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சாலை வளைவில் முன் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை இல்லாத காரணத்தினால் இவர்கள் வேகமாக ஓட்டி வந்த கார் திரும்ப இயலாமல் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் பிரதீப், விஜயன், மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுதாகர் மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அன்பழகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...