தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்து பொதுச்சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எந்த காரணத்தைக் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், கல்வி நிலையங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் அருகே மற்றும் மின் மாற்றிகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.
நெடுஞ்சாலைகள் உட்பட போக்குவரத்து உள்ள எந்த சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.
அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுச்சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
சட்டவிதிகளுக்குட்பட்ட மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எந்த காரணத்தைக் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், கல்வி நிலையங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் அருகே மற்றும் மின் மாற்றிகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.
நெடுஞ்சாலைகள் உட்பட போக்குவரத்து உள்ள எந்த சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.
அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுச்சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
சட்டவிதிகளுக்குட்பட்ட மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.