9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இன்று (அக்.,14) அதிகாலை விவசாய நிலத்துக்குள் உடல்நலக்குறைவால் சுருண்டு விழுந்த காட்டு யானை 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடைப் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அச்சுறுத்தி வருகின்றன . இந்த நிலையில், இன்று (அக்.,14) அதிகாலை யானைக் கூட்டங்கள் மதுக்கரை சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்செய்துவந்தன. 

அப்போது, அதில் ஒரு பெண் யானை ஒன்று உடல்நலகுறைவால் விவசாய நிலத்திலேயே சுருண்டு விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் யானையை எழுப்பி, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். எந்த முயற்சியும் பலனளிக்காததால், மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான வனத்துறையின் மருத்துவக்குழு விரைந்து வந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

சுமார் 9 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, கிரேனின் உதவியுடன் 40-வயது மதிக்கத்தக்க அந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானையை காப்பாற்றிய வனத்துறையின் மருத்துவக் குழுவிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் பெரியநாயக்கன்பாளையம் பாலமலைப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க யானைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...