கோவையை சேர்ந்த பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேந்தவர் சுப்ரமணியம். இவரது மகன் ரங்கநாதன் (36). இவருக்கு கோவையை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் வாட்சாப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பார்க்காமலே காதலித்து வந்தனர். தொடர்ந்து, பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரங்கநாதன் பெற்றுள்ளார்.
இந்த சூழலில் ரங்கநாதனுக்கு முன்னதாகவே திருமணம் நடந்து விவாகரத்தானவர் என்பதும் தெரியவரவே சம்மந்தப்பட்ட பெண் ரங்கநாதனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரங்கநாதன் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாட்சாப் மூலம் பலருக்கு அனுப்பியுள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-இடம் புகார் அளித்தார்.
புகரின் பேரில் வழக்குப்பதிவு சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் மல்லிகா இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
அப்போது ரங்கநாதனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும், தற்போது பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரவவிட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ரங்கநாதன் மீது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுதல், பெண்ணின் கன்னியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்ட்-ஐ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேந்தவர் சுப்ரமணியம். இவரது மகன் ரங்கநாதன் (36). இவருக்கு கோவையை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் வாட்சாப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பார்க்காமலே காதலித்து வந்தனர். தொடர்ந்து, பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரங்கநாதன் பெற்றுள்ளார்.
இந்த சூழலில் ரங்கநாதனுக்கு முன்னதாகவே திருமணம் நடந்து விவாகரத்தானவர் என்பதும் தெரியவரவே சம்மந்தப்பட்ட பெண் ரங்கநாதனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரங்கநாதன் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாட்சாப் மூலம் பலருக்கு அனுப்பியுள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-இடம் புகார் அளித்தார்.
புகரின் பேரில் வழக்குப்பதிவு சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் மல்லிகா இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
அப்போது ரங்கநாதனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும், தற்போது பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரவவிட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ரங்கநாதன் மீது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுதல், பெண்ணின் கன்னியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்ட்-ஐ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.