டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி பலி - கோவை மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு


கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோபிச் செட்டிப்பாளையத்தை அடுத்த நஞ்சே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர், சலவைத்தொழில் செய்து வருகிறார். அவருக்கு அனுஸ்ரீ என்ற 6 வயது மகள் இருந்தார்.

சிறுமி அனுஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர்,  கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியின் ரத்த மாதிரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர். 

இதை தொடர்ந்து, சிறுமி அனுஸ்ரீ கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு, சிறுமிக்கு காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (அக்.,13) மாலை சிறுமி பரிதாபமாக பலியானார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பால், ஏற்படும் தொடர் உயிரிழப்புகளினால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த 47 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 27 பேர் கோவை மாவட்டத்தையும், 12 திருப்பூர் மாவட்டத்தையும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேரும் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...