டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக செயல்படும் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைளில் அஜாக்கிரதையாக செயல்படும் அரசு அலுவலர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் இன்று (அக்டோபர் 13) மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவு சுகாதாரப்பணிகளை, ஒவ்வொரு வீடு வீடாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடத்தில் வலியுறுத்தியதாவது,:-

''கோவை மாவட்டம் முழுவதிலும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்களாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஒவ்வொறு மாதமும், முதல் 5 தினங்களுக்கு நிலவேம்பு நீர் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. குடியிறுப்பு பகுதிகளில் தூய்மை காவலர்கள் மூலமும், சுகாதாரப்பணியாளர்கள் மூலமும் பல்வேறு துப்புறவு, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுகாதாரத்துறையின் மூலம் சுழற்சி அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அரசு ஆரம்ப நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் வருபவர்களை தொடர்ந்து கண்கானித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களும் சுகாதாரம் காத்து நமது மாவட்டத்தை டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வலியுறுத்தினார்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அஜாக்கிரதையாக இருக்கும் அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சி) பத்மாவதி, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், கோட்டாட்சியர் ஆர்.சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...