வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று (அக்.,13) பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான இடங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று (அக்.,13) பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான இடங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.