கோவை அரசு மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனையாளர்கள் சந்தித்துக்கொள்வதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் சுற்றிவந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அவரை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் சாய்பாபா காலனி பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திர பாபு (27) என்பதும், கோவையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிச்சந்திர பாபு-வை கைது செய்து சிறையிலடைத்தனர்.