குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற மில் ஊழியருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் நெரிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் (28). கோவை ஒண்டிப்புதூர் அடுத்துள்ள கதிர் மில் பஞ்சாலையில் பணியாற்றிய இவர் அதே மில்லில் வேலை பார்த்து வந்த முருகேஷ்வரிக்கும் காதல் ஏற்பட்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமனதிற்கு பின் பாக்யராஜிற்கு குடிபழக்கம் ஏற்பட்டு மது அருந்த பணம் கேட்டு மனைவுடன் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வந்தவர் வேலைக்கும் ஒழுங்காக செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2.11.2013 அன்று பாக்யராஜ் முருகேஷ்வரியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். முருகேஷ்வரி பணம் தர மறுக்க ஆத்திரமடைந்த பாக்யராஜ் முக்காலி கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்தவர். அதை மறைப்பதற்கு முருகேஷ்வரி தூக்கில் தொங்கவிட்டு  தற்கொலை செய்ததது கொண்டது போல் நாடகமாடியுள்ளார்.

இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. பிரேத பரிசோதனையில் முருகேஷ்வரி கழுத்து நெறித்து கொல்லபட்டது உறுதி செய்யபட பாக்யராஜ் மீது வழக்கு பதியப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொலை செய்தல்,தடயத்தை மறைத்தல் ஆகிய 2 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று தீர்ப்பு அளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி அல்லி (பொறுப்பு) 302 பிரிவின் கீழ் பாக்யராஜிற்கு ஆயுள் தண்டனையும் 2500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தவர் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 201 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் 3 மாத  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கும்படி மகிளா நீதிமன்ற நீதிபதி அல்லி (பொறுப்பு) தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...