தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கோரி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தொழிலாளர்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு எஸ்டேட் தொழிலாளர்கள் 20 சதவிகித தீபாவளி போனஸ் வேண்டியும், நிர்வாகம் வழங்கிய 9.5 சதவிகித போனஸிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயம், வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு நாளை தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டது. 

மேலும், இருபது சதவிகித போனஸ் வழங்க வேண்டுமெனவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் குடும்பத்துடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...