நவ.3 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வருகிற நவம்பர் 3ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டு பயணடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பல்வேலு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுநாள் வரையிலும் கிடைக்கப்பெறமால் இருப்பின் இதுகுறித்து தங்கள் குறைகள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறை தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் மனுக்களை இரட்டை பிரதிகளில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு 20.11.2017-க்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான ஓய்வூதிய குறைதீர்ப்பு நாள் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற நவம்பர் 3 அன்று வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை ஓய்வூதிய இயக்குநர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முகக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓய்வூதிய குறை குறித்து மனு அனுப்ப வேண்டிய மாதிரிப் படிவம்

1. பெயர் மற்றும் முகவரி.

2. பி.பி.ஓ. எண்.

3. ஓய்வு பெற்ற நாள்.

4. கடைசியாக விகித்த பதவி மற்றும் துறை.

5. குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்.

6. முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் (சுநகநசநnஉந)

7. இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடாந்திருந்தால் அதன் விவரம்.

8. குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விபரம்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...