இரட்டை இலை சின்னத்தினை மீட்டெடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தில்லியில் விசாரணைக் கைதியாக உள்ளார்.
மேலும், இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வரப்பெற்றதையடுத்து தொடர்ந்து விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.
இதனிடையே, கோவை மாவட்டம், கணபதியை சேர்ந்த ராஜவேல் என்பவரிடம் ஒப்பந்தங்கள் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சத்தை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து விட்டதாகக் வழக்கு பதியப்பட்டு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதற்காக, தில்லியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் வழக்கு விசாரணையை வருகின்ற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும், இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வரப்பெற்றதையடுத்து தொடர்ந்து விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.
இதனிடையே, கோவை மாவட்டம், கணபதியை சேர்ந்த ராஜவேல் என்பவரிடம் ஒப்பந்தங்கள் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சத்தை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து விட்டதாகக் வழக்கு பதியப்பட்டு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதற்காக, தில்லியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் வழக்கு விசாரணையை வருகின்ற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.