இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

இரட்டை இலை சின்னத்தினை மீட்டெடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தில்லியில் விசாரணைக் கைதியாக உள்ளார். 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வரப்பெற்றதையடுத்து தொடர்ந்து விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். 

இதனிடையே, கோவை மாவட்டம், கணபதியை சேர்ந்த ராஜவேல் என்பவரிடம் ஒப்பந்தங்கள் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சத்தை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து விட்டதாகக் வழக்கு பதியப்பட்டு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்காக, தில்லியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் வழக்கு விசாரணையை வருகின்ற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...