கோவை - மேட்டுப்பாளையம் சாலையானது போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் என அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் இந்த சாலையினை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாலை என்ஜிஜிஓ காலனி கேட் அருகே லாரி ஒன்று சாலையின் திருப்பத்தில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த சேற்றில் சிக்கியது.

சாலையை குறுக்கிட்டவாறு லாரி நின்றதால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இதனைத்தொடர்ந்து, கிரேன் உதவியுடன் சேற்றில் இருந்து லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாலை என்ஜிஜிஓ காலனி கேட் அருகே லாரி ஒன்று சாலையின் திருப்பத்தில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த சேற்றில் சிக்கியது.

சாலையை குறுக்கிட்டவாறு லாரி நின்றதால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இதனைத்தொடர்ந்து, கிரேன் உதவியுடன் சேற்றில் இருந்து லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.