புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக-வில் இணைந்தாரா ?


மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட மக்களை வஞ்சித்து வரும் திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தமிழக எதிர்க் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக அமல்படுத்தும் திட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கேரளாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்று விட்டு நேற்று கோவைக்கு வந்தார்.

அவரை தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார். அப்போது முரளிதரராவ், கிருஷ்ணசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பிற அரசியல் கட்சியினரிடையே பரபரப்பையும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எந்த ஒரு அறிவிப்போ, நிகழ்வோ நடந்தால் அதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள கிருஷ்ணசாமி, தற்போது பாஜக தமிழக பொறுப்பாளரை சந்தித்த சம்பவம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல் இருப்பது அரசியல் கட்சியினரிடையே புதிய தமிழகம் கட்சி பாஜகவில் இணைந்து விட்டதா? அல்லது அக்கட்சி முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டு கிருஷ்ணசாமி பாஜக-வில் இணைந்துவிட்டாரா ? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...