தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதில் கோவையில் தற்போது வரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அறிவித்து வரும் தமிழக அரசு அதனை ஒழிக்க எவ்வித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று தேமுதிக சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக காட்டன் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெங்கு காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்தி ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அறிவித்து வரும் தமிழக அரசு அதனை ஒழிக்க எவ்வித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று தேமுதிக சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக காட்டன் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெங்கு காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்தி ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.