காஷ்மீர் தனி நாடா? பீகார் பள்ளி வினாதாள் கேள்வியால் சர்ச்சை

பாட்னா : பீகாரில் உள்ள பள்ளிகளில் அக்டோபர் 5 ம் தேதி தேர்வு நடந்துள்ளது. இதற்காக மத்திய அரசின் சர்வ ஷிக்சா அபியான் திட்டத்தின் கீழும், பீகார் பள்ளி திட்ட கழகத்தின் கண்காணிப்பிலும் செயல்படும் அமைப்பால் வினாதாள்கள் தயார் செய்யப்பட்டு, பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதில், 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், கீழ்வரும் 5 நாடுகளில் வசிக்கும் மக்களை எப்படி அழைப்பார்கள் என கேட்கப்பட்டு, சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர், இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பது போலவும், காஷ்மீர் தனி நாடு என கூறும் வகையிலும் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இதனை கண்டுபிடித்து நேற்று வெளிப்படுத்தி உள்ளான். இது தொடர்பாக வைஷாலி மாவட்ட கல்வி அதிகாரி சங்கீத் சின்காவிடம் கேட்டதற்கு, நான் விடுமுறையில் இருந்ததால் இது பற்றி எனக்கு தெரியாது. இது விவகாரம் குறித்து விசாரிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

பீகார் கல்வி திட்ட கழக அதிகாரி பிரேம் சந்திராவிடம் கேட்டதற்கு, இது அசு்சுப்பிழையாக இருக்கலாம். இது எப்படி நடந்தது என தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த வினாதாள்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சிடப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....