சென்னை: '' தமிழகத்தில் மது விலக்கு குறித்த கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மதுபான விலை உயர்வு ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது ,'' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: ஜெயலலிதா இருந்த போதில் இருந்தே பல விஷயங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளோம். பா.ஜ., ஆட்சி மூன்று ஆண்டுகளாக எதுவும செய்யவில்லை.
குட்கா முறைகேட்டில், சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான் உண்மை வெளியே வரும். இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். எங்களுக்கு நியாயம் நிச்சயமாக கிடைக்கும். 89 கோடி ரூபாய் வருமான வரித்துறை சோதனை நடத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில், ஒரு அமைச்சர், இரண்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என வருமான வரித்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், அரசோ மதுபானங்களின் விலையை உயர்த்துவது ஏன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: ஜெயலலிதா இருந்த போதில் இருந்தே பல விஷயங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளோம். பா.ஜ., ஆட்சி மூன்று ஆண்டுகளாக எதுவும செய்யவில்லை.
குட்கா முறைகேட்டில், சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான் உண்மை வெளியே வரும். இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். எங்களுக்கு நியாயம் நிச்சயமாக கிடைக்கும். 89 கோடி ரூபாய் வருமான வரித்துறை சோதனை நடத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில், ஒரு அமைச்சர், இரண்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என வருமான வரித்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், அரசோ மதுபானங்களின் விலையை உயர்த்துவது ஏன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.