கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவரின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப்பிடம் மனுக்களை கொடுத்தனர்.

இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப் பேசுகையில், காரமடை பகுதியில் 3-ம் பாலினத்தவர்கள் 24 பேருக்கும், சின்னவேடம்பட்டி பகுதியில் 10 பேருக்கும் குடியிருக்க இடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் தற்போது குடியிருந்து வருகின்றனர். இதேபோல, போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இடம் வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

3-ம் பாலினத்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது கோரிக்கைகளை விரைவில் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப்பிடம் மனுக்களை கொடுத்தனர்.

இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப் பேசுகையில், காரமடை பகுதியில் 3-ம் பாலினத்தவர்கள் 24 பேருக்கும், சின்னவேடம்பட்டி பகுதியில் 10 பேருக்கும் குடியிருக்க இடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் தற்போது குடியிருந்து வருகின்றனர். இதேபோல, போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இடம் வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

3-ம் பாலினத்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது கோரிக்கைகளை விரைவில் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.