சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவருக்கான கோரிக்கை சிறப்பு முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவரின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப்பிடம் மனுக்களை கொடுத்தனர்.



இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப் பேசுகையில், காரமடை பகுதியில் 3-ம் பாலினத்தவர்கள் 24 பேருக்கும், சின்னவேடம்பட்டி பகுதியில் 10 பேருக்கும் குடியிருக்க இடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் தற்போது குடியிருந்து வருகின்றனர். இதேபோல, போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இடம் வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.



3-ம் பாலினத்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது கோரிக்கைகளை விரைவில் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...