கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (09.10.2017) மாநகர, ஊரக பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்ககைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, இந்தக் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், குடிநீர் மூலம் உற்பத்தியாகும் லார்வாக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரகப்பகுதிகளிலும் சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடாத வகையில் பணியாற்றிட அனைத்து அலுவலர்களுக்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் புறவெளிகளில் தூய்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று தண்ணீர் தேக்கிவைத்துள்ள தொட்டிகள், பிரிட்ஜில் உள்ள தண்ணீர் சேமிப்பான், வாளி போன்றவற்றினை சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.



நீண்டநாட்களாக கண்டிப்பாக தண்ணீர் சேமித்து வைக்ககூடாது அது சுகாதார சீர்கேட்டிற்கு (கொசு உற்பத்தியாகவே) வழிவகுக்கும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் என்று வரும் நோயிகளுக்கு உடனடியாக இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கிட வேண்டும். 

அதுபோலவே, பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் வரும் குழந்தைகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் போர்கால அடிப்படையில், செயல்பட்டு நமது மாவட்டத்தின் சுகாதாரத்தினை பேணிக்காத்திட ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார். 

இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாரதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...