தாராபுரம் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்- சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு அருந்ததி (13) என்ற மகளும், நந்தன் (11) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தைகள் இருவருக்கும் காய்ச்சல் வந்தது. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிறுவனுக்கு காய்ச்சல் குணமானது. ஆனால், சிறுமி அருந்ததிக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு காய்ச்சல் அதிகமானது.
தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அருந்ததி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.