கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் ப்ரோசோன் மாலில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3ம் தேதியன்று துவங்க நடைபெற்று வருகிறது. வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் இலவச ஆலோசனை, டிஜிட்டல் மேமோகிராம், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட மார்பக பரிசோதனை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து கே.எம்.சி.எச்.மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரூபா கூறியதாவது:-

மார்பக புற்றுநோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் 2 பெண்களுக்கு ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும். பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி, மார்பகக்காம்புகளில் கசிவு, மார்பகக்காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் எதாவதொன்று இருந்தாலோ, இரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களை கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

இங்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 31ம் தேதி வரையிலான இம்மாதம் முழுவதும் நடக்கிறது. இதில் ரூ.2,750 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.999 சலுகை கட்டணத்திலும், ரூ.900 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.450 சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மார்பக புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியலாம். பாதிப்பு நிலை துவக்கத்திலேயே கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைகள் மேற்கொண்டு மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ரூபா கூறினார்.

இதனை தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா  ஜி பழனிச்சாமி கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சலுகை கட்டணத்தில் பெண்களுக்கான மார்பக பரிசோதனைகளையும் , இலவச ஆலோசனைகளையும் இம்மாதம் முழுவதும் வழங்கிவருகிறோம் என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும், மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரூபா, கே.எம்.சி.எச் மருத்துவமனை, அவினாசி ரோடு, கோவை, தொலைபேசி எண் : +91 98940 08800, +91 422 4324151, , இ-மெயில் : [email protected] ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...