நாட்டில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களையவும், வர்த்தகர்களுக்கும் வர்த்தகச் சந்தைக்கும் ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றுவதற்காகவும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியும் ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சனைகளை முழுமையாகவும், விரைவாகவும் களையப்படும் என அண்மையில் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இன்றைய (06.10.2017) கூட்டத்தில் மாதந்தோறும் வரி தாக்கல் செய்யப்படுவதற்கு பதிலாக காலாண்டிற்கு ஒருமுறை தாக்கல் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. நிலையான வரி 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட சிறு வியாபாரிகள் composition scheme கீழ் நிலையான வரியை செலுத்த வேண்டிய அளவீட்டை உயர்த்தவும், தற்போது நடைமுறையில் உள்ள ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம், ஜிஎஸ்டி பதிவு செய்யாத வியாபாரிகள் பயன்படுத்த 31.08.2018 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் மூலம் வரியை செலுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இன்றைய (06.10.2017) கூட்டத்தில் மாதந்தோறும் வரி தாக்கல் செய்யப்படுவதற்கு பதிலாக காலாண்டிற்கு ஒருமுறை தாக்கல் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. நிலையான வரி 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட சிறு வியாபாரிகள் composition scheme கீழ் நிலையான வரியை செலுத்த வேண்டிய அளவீட்டை உயர்த்தவும், தற்போது நடைமுறையில் உள்ள ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம், ஜிஎஸ்டி பதிவு செய்யாத வியாபாரிகள் பயன்படுத்த 31.08.2018 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் மூலம் வரியை செலுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.