கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் - மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தமப்பதி ஊராட்சியில் “ஸ்வச்ச ஃபக்வாடா” என்ற கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தும், பார்த்தீனிய செடிகளை அகற்றியும், துப்புறவு பணிகளை மேற்கொண்டும் கிராமவளம் மற்றும் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். 

பின்னர், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, கோவை மாவட்டம் “ஸ்வச்ச ஃபக்வாடா” எனும் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் கடந்த 1-ம் தேதி தொடங்கப்பட்டு வரும் 15 -ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும்; கிராமவளம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

 இவ்வியக்கத்தின் நோக்கம், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல், அனைத்து கிராம ஊராட்சிகளையும் தன்னிறைவு அடைய செய்தல், பொது இடங்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரித்தல் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே தெரிவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இச்சிறப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும், அரசுடன் இணைந்து தங்களது சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திட உதவிடுமாறும், தங்களால் இயன்ற அளிவிலான மரக்கன்றுகளை நடவு செய்து நமது கிராம பசுமையாக மாற்றிட உதவிடுமாறும் இத்தருணத்தில் கேட்டுக்கொண்டு, இத்திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, கிராமப்புறங்களை திறந்த வெளி கழித்தலற்ற ஊராட்சிகளாக மாற்றவும், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவதன் அவசியத்தினை குறும்படங்கள் மூலம் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மின்னனு விளம்பர வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் .ஹரிஹரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், வீ.பத்மாவதி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .அ.ரவிச்சந்திரன், பணிமேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...