கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பிர்ந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (76). இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதியினருக்கு அஞ்ஜனா மற்றும் அப்பர்ணா ராஜன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நாராயணன் 1963 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இந்தியா - சீனா இடையேயான போரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது தான் உயிரிழந்த பின் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடற்கூறு கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள நாராயணன் உடல் தானம் செய்துள்ளார்.

அதன்படி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்திரவேலிடம் உடல் தானத்திற்கான ஆவணங்களை நாராயணன் வழங்கினார்.