அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : கேரள மருத்துவமனைகளால் புறக்கணிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனின் கை மற்றும் கால்களில் வெட்டுப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, வெட்டுக்காயமடைந்த ராஜேந்திரனுக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

தொடர்ந்து, வேலாயுதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளிக்க தாமதமானதால் காலில் உள்ள செல்கள் இறந்துவிட்டதாகவும், அதனால் காலை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இதனிடையே, இன்று ராஜேந்திரனுக்கு கேரள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சிகிச்சை அளிக்க மறுத்த கேரள அரசு மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

இது குறித்து ராஜேந்திரனின் மகன் ராகவன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில், 'என் தந்தைக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சிகிச்சை அளிக்க தாமதமானதால் என் தந்தையின் காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

எங்கள் மொத்த குடும்பமும் தந்தையின் வருமானத்தை நம்பியே உள்ளது. எனது தந்தையின் கால் பறிபோனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு எங்கள் படிப்பும் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்ட கேரள மருத்துவமனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...