பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் விழாக்கால தொடர்விடுமுறையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் அடுத்துள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் ஆகும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு தொடர் விடுமுறை என்பதாலும் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வால்பாறை சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, கூலாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அதிகாலை பனிப் பொழிவு, குளிர்ச்சியான காலநிலை உள்ளிட்டவற்றை காண்பதற்காகவே விடுமுறை நாட்களை இங்கே கொண்டாட வந்துள்ளோம்.

இருப்பினும், வால்பாறையை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


கோவை மாவட்டம் அடுத்துள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் ஆகும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு தொடர் விடுமுறை என்பதாலும் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வால்பாறை சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, கூலாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அதிகாலை பனிப் பொழிவு, குளிர்ச்சியான காலநிலை உள்ளிட்டவற்றை காண்பதற்காகவே விடுமுறை நாட்களை இங்கே கொண்டாட வந்துள்ளோம்.

இருப்பினும், வால்பாறையை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
