காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலைகட்டும் டாஸ்மாக் கடைகள்..!


கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினமான இன்று மூட உத்தரவிடப்பட்டது.

விதிமுறைகளுக்கு முரணாக இன்று மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்திருந்தார். ஆனால், கோவையின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இன்று வெளிப்படையாகவே மது விற்பனை நடப்பதை பார்க்க முடிகிறது.



மேட்டுப்பாளையம் சாலையின் அருகில் அமைந்துள்ள சங்கனூர் சாலை, கண்ணப்பன் நகரில் நான்கு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இந்த கடைகள் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. குறிப்பாக சாதாரண நாட்களில் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இன்று காந்தி ஜெயந்தி தினத்தின் சிறப்பு விற்பனையாக காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை நடந்துவருவதாக அங்குள்ள பொதுமக்கள் புகாரளித்தனர்.

மேலும், இவர்களை தண்டிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், காலையிலேயே வந்து மாமூல் வாங்கிவிட்டு, மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

விசாரித்ததில், அரசு நிர்ணய விலையை விட அதிக விலையில் இன்று மது பாட்டில்கள் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அரசு உத்தரவை மதிக்காத டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீதும், அவர்களுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் படி சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...